Monday, 3 September 2012

ASIA'S BIGGEST NANDHI.ஆசியாவிலேயே மிகப்பெரிய நந்தி .

                        ஆசியாவிலேயே மிகப்பெரிய நந்தி

       அந்த நந்திக்குப் பின்னால் ஒரு அருமையான கதை

     தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்காக ஒரு சிற்பி நியமிக்கப்பட்டாராம் (அவரின் பெயர் நினைவில்லை )அவர் நந்தியை அமைப்பதற்காக ஒரு பெரிய பாறையை எடுத்து வந்தனராம். வரும் வழியில் காவிரி ஆற்றைக்  கடக்கும் போது சிற்பியின் மகன் அந்தப் பாறையின் மேல் ஆற்று நீரை ஊற்றி (பாறையின் வெப்பத்தை தவிர்க்க ) வந்தாராம் .பாறையின் ஒரு இடம் மட்டும் ஈரம் காயவில்லையாம் .

     கரையைத் தொட்டதும் உடனே தன்  தந்தையை நோக்கி "அப்பா இந்த பாறையிலா நந்தியை செதுக்குவது " என்றான் .அதற்கு அவரோ "ஆமாம்" என்றார் .அப்பா "இப்பாறையில் தேரை (ஒருவகை தவளையினம் ) உள்ளது, எனவே இது ஆகாது" என்றான் .அதற்கு அவரோ "அடேய் மகனே,நான் பார்த்து எடுத்து வந்த பாறையடா ,எனக்கே நீ புத்தி சொல்ல வருகிறாயா ? என்றார் கோபத்துடன் .அதற்கு அவனோ "என் அப்பா மிகப்பெரிய சிற்பியாக இருக்கிறார் என்றால் அது எனக்குப் பெருமை ,அதே சமயத்தில் என் தந்தை தவறு செய்துவிட்டார் என்றால் அது எனக்கும் மிகப்பெரிய அவமானம் "என்றான் சற்றும் சளைக்காமல் .


        " முடிவாக என்ன சொல்கிறாய்" என்றார் சிற்பி.மகனோ "பாறையை மாற்றுங்கள்"அதற்கு அவரோ "சரி,நீ சொல்வது போல் தேரை இருந்தால் நான் ,உன்  சொல்லுக்கு கட்டுப்படுவேன் ,அதே போல் தேரை இல்லை என்றால் நீ என் சொல்லுக்குக் கீழ்படிய வேண்டும் " என்றார் ."அப்படியே செய்கிறேன் அப்பா "என்றான் மகன்.அந்தப் பாறை சிற்பியின் மகன் சொன்ன இடத்தில் உளியில் தட்டப்பட்டது.பாறைத் துணுக்கு சிதறியவுடன் உள்ளிருந்து ஒரு சிறிய தேரை குதித்து வெளியே வந்தது .


   அதைப் பார்த்த சிற்பி தன் மகனிடமே தோற்றோமே என்று வருந்தினாராம்,அதற்கு மகனோ "அப்பா,அப்பாறையை நந்தியாக செதுக்கினால் ஒரு நாள் அப்பாறையில் வெடிப்பு ஏற்படும்,அது உங்களுக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்ப்பட்டிருக்கும்,அது என்னால் தடுக்கப்பட்டது,இது தவறா அப்பா? என்றான்.பிறகு  சிற்பி தன்  மகனை அணைத்து "என் மகன் என்னைக் காத்தான் " என்று கூறி "சரி, சரி, நான் போட்டியில் தோற்றுவிட்டேன்,நீ என்ன சொல்கிறாயோ அதன் படி நடப்பேன் இது சத்தியம்"என்றார் .


   "அப்பா ,இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலை நாம் கட்டுவதற்கு வாய்ப்பு கொடுத்த  நம் மாமன்னர் இராஜ ராஜ சோழருக்கு நன்றி கடனாகவும், எனக்காகவும் நீங்கள் இக்கோவிலை கட்டுவதற்கு ஒரு வராகன் கூட வாங்கக் கூடாது ,இது தான் நான் உங்களிடம் கேட்கும் என் வெற்றிப் பரிசு "அதற்கு அவரோ தன மகனைக் கட்டி அணைத்து ,"மகனே ,நீ நீடுழி வாழ்க ,உன்னைப் பெற்றதற்கு நான் பெருந்தவம் செய்திருக்கவேண்டும் ,நீ சொன்னபடி ஒரு வராகன் கூட வாங்க மாட்டேன் இது சத்தியம்" .என்றார் ,அப்படி கட்டின கோவில் இக்கோவில் ,அது மட்டும் அல்ல பல விந்தைகளை உள்ளடக்கிய கோவில்.


    அது சரி எங்கே அந்த  உடைத்த பாறை (தேரை இருந்த) அது  இன்னமும் தஞ்சைக்கு  5 அல்லது 6 km முன்  சாலையோரம்  இருக்கிறதாம் .


      தஞ்சை கோவிலைப் பார்க்கும் போது    மாமன்னர் இராஜ ராஜ சோழர் மட்டுமல்ல ,அந்த சிற்பியும் அவரது மகனும் நினைவுக்கு வருவார்கள் .

Saturday, 1 September 2012

HOW TO BUY A HOUSING LOAN ?(tamil)வீடு கட்ட கடன் பெறுவது எப்படி ?

வீடு கட்ட கடன் பெறுவது எப்படி ?

  "வீட்டைக் கட்டிப்பார்,கல்யாணம் பண்ணிப்பார்" என்பது பழமொழி.நடுத்தர மக்களின் கனவுகளில் ஒன்று .கல்யாணம் கூட ஈசியாக பண்ணிடலாம்.ஆனா வீடு கட்டுவது இருக்கே அதுவும் பாங்க்ல கடன் வாங்கி கட்றது இருக்கே, நல்ல பொறுமை வேண்டும் .பல பேங்க்குகள் உடனே  கடன் தருவதில்லை,நாம் அவர்களிடம் பல ஆவணங்களை சமர்ப்பித்து பிறகுதான் கடன் கொடுப்பார்கள் (குறைந்தது 3 அல்லது 4  மாதங்கள் ஆகலாம் ). அதற்கான   ஆவணங்களைப் பார்ப்போம் .



தேவையான  ஆவணங்கள்  
* மனை இடம்  மூலப்பத்திரம்  + வில்லங்கசான்று 
* பத்திரம் யார் பெயரில் உள்ளதோ (கடன் வாங்குகிறவர் ) அவரின் அடையாள சான்று .
* வங்கி பாஸ் புத்தகம் (ஜாமீன்தாரர்+ கடன் வாங்குகிறவர்)
மனை இடம் approval (பஞ்சாயத்து (அ) நகராட்சி )
* வீட்டின் பிளான் + engineer கொட்டேஷன் 
* (அரசு )ஊழியராக இருந்தால் ஊதியசான்று + வருமான வரி படிவம் 16(form 16)
  இவை எல்லாம் கொடுக்க வேண்டும் .

       இவைகளை பார்வையிட்டு வக்கீலிடம் legal opinion வாங்கிய பிறகுதான் வீடு கட்டும் இடத்தை பார்க்க வருவார்கள் .அதன் பிறகு பேங்க்கின் applicationயே  நிரப்ப சொல்வார்கள் .அதில் உங்களுக்கு வேறு சொத்துக்கள் ,(நகரும் ,நகராத )நகைகள் அனைத்தும் குறித்துக்கொள்வார்கள் ,பிறகு நம் விண்ணப்பத்தையும் ,மேலே குறிப்பிட்ட சான்றுகளின் நகல்களையும் சேர்த்து மாவட்ட கிளைக்கு அனுப்பி ,அவர்களின் அனுமதிக்குப் பிறகே கடன் கிடைக்கும் (நாம் கேட்ட தொகையில் 20% குறைவாக ).

   பின்னர் அந்தத் தொகையை அஸ்திவாரமத்திற்கு ஒரு பகுதியையும் ,நிலமட்டத்திற்கு  ஒரு பகுதியையும் ,கான்கிரிட் தளத்திற்கு ஒரு பகுதியையும் மொத்தம் 3 அல்லது 4 தவணைகளில் கொடுப்பார்கள் .ஒவ்வொரு நிலையிலும்  கட்டுமான பணிகளை போட்டோ எடுத்து கொடுக்க வேண்டும் . எனவே நாம் கடன் வாங்கும் முன் கொஞ்சம் அதாவது குறைந்தது  20% நாம் கையில் வைத்திருக்க வேண்டும் .

 எந்த வங்கிகளில் வாங்கலாம் ?


 தேசிய மயமாக்கப்பட்ட பேங்க்குகளில் வாங்கலாம் .தனியார் பாங்க்குகள் மறை முக கட்டணங்கள் இருக்கலாம் .LIC HFL போன்றவற்றில் ஏஜன்ட் கமிசன் ,processing fees அதிகம் என நண்பர் கூறினார் .SBI பரவாயில்லை என்றார் .

  கடன் அனுமதி கடிதம் கிடைத்தவுடன் நம் அசல் ஆவணங்களை பேங்க்கில் வைத்துக்கொள்வார்கள் .முதல் வருடம் வட்டி பொதுவாக குறைந்தே இருக்கும் .பிறகு RBI  வட்டி படியும் அல்லது fixed வட்டி படியும் திரும்ப் தவணையை செலுத்தலாம் .இது தவிர வீட்டு பத்திரத்தில் வில்லங்கம் இருப்பின் அதை சரி செய்து கொடுக்க அவர்கள் கேட்கும் சான்றுகளை நாம் கொடுக்க வேண்டும் .(வாரிசு சான்று ,நோட்டரி வக்கீல் அபிடவிட் சான்று போன்றவை ).
   இவை எல்லாம் சுருக்கமானவை ஆனாலும் பேங்க் செல்லும் முன் உங்களுக்கு கட்டாயம் பயன்படக்ககூடியவை.பலவித பேங்க்குகளில் பலவிதமாக நடைமுறைகள் இருக்கலாம் .நீங்கள் தீர விசாரித்து அறிந்து கொள்ளுங்கள் .
            
           வாழ்த்துக்களுடன் ....

GURUVAREDDIYUR G.G.GURUMOORTHY IYYA - கொடைவள்ளல் ஜி .ஜி . குருமூர்த்தி அய்யா

கொடைவள்ளல் ஜி .ஜி . குருமூர்த்தி அய்யா


குருவரெட்டியூர் என்றாலே நினைவிற்கு வருவது   ஜி .ஜி . குருமூர்த்தி அய்யா தான்.
நம் உலகில் எத்தனையோ பேர் பிறப்பர்,இறப்பர். அது முக்கியமில்லை ,
எவர்
றந்துமே இருப்பர், அதுதான் முக்கியம் .
அப்படிப்பட்ட மனித தெய்வங்களை யாரும் மறப்பதில்லை .


காட்சிக்கு எளியவர் ,
எம்.எல்.ஏ ஆனாலும் பேருந்தில் மட்டும் பயணம் செய்தவர் ,கடைசி காலம் வரை ஓலை குடிசையில் வாழ்ந்தவர் , தன் உடமைகளை தானே துவைத்துக் கொண்டவர் .


அவரைப் பற்றிய சிறு குறிப்பு .
பெயர்  ;ஜி.ஜி.குருமூர்த்தி
செல்ல பெயர் :பண்ணாடி(மக்களால் அன்புடன் )
பெற்றோர் ; தாயம்மாள்-ஜி.ஆர்.குருசாமி ரெட்டியார்
பிறப்பு :22 .12 .1921
திருமணம் :1940
மனைவி :பாப்பம்மாள் (எ)அக்கம்மா
ள்,
குழந்தைகள் :ஆண் 4 ,பெண் 2
அரசியல் ஆசான் :பெருந்தலைவர்  காமராசர்,
தெய்வப் பதவி :26 .06 .2011


வகித்த பதவிகள் :

1 . 1950 -51 கிராம  மணியகாரர்,
2 .1954 -1970 வரை குருவரெட்டியூர் பஞ்சாயத்து  தலைவர் ,
3 .1957 -பவானி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.மேட்டூர் அணை வடகரை ,தென் கரை பாசன வசதியை ஏற்படுத்தியவர் ,

4 .1965 -மே மாதம் அம்மாபேட்டை பேரூராட்சி தலைவர் ,
 5 . குருவரெட்டியூர் ,நெசவாளர் கூட்டுறவு 20 ஆண்டுகள்   சங்க தலைவர் ,
6 .மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் சொத்து பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் ,
7 .1989 ல்  பவானி தொகுதி சுயேச்சை  எம்.எல்.ஏ,
8 .தமிழ்நாடு மாநில சமாஜ் வாதி ஜனதா தள தலைவர் (முன்னாள் பிரதமர் சந்திரசேக
ர் காலத்தில்)
9 .சக்தி சுகர்ஸ் இயக்குனர் .


செய்த சேவைகள் :(நிறைய -அவற்றில் சில )

1 .1938 ல் ஊ .ஒ .து.பள்ளிக்கு இடமும் கட்டிடமும் இலவசமாக தந்தார் ,
2 .1951 ல் உயர் நிலை
பள்ளிக்கு இடமும் கட்டிடமும் இலவசமாக தந்தார் ,
3 .1953 ல் மேல் நிலை பள்ளியாக்கி
இடமும் கட்டிடமும் இலவசமாக தந்தார் ,
4 . குருவரெட்டியூர் ஆரம்ப சுகாதார நிலையம் ,தொடக்க வேளாண்மை சங்கம் ,நூலகம் இவை யாவும் அவர் கொடுத்த   நிலமே .


   அதுமட்டுமல்லாமல் அவரது குடும்பத்தார்  .ஊ .ஒ .து.பள்ளிக்கு நூற்றாண்டு விழாவிற்கு நினைவு வளைவு ஏற்படுத்தி
வாழையடி 
வாழையாக அவர் வழியில் செல்கின்றார்கள் .


குருவரெட்டியூர் இருக்கும்வரை அவரின் புகழ்
இருக்கும்.

ஒரு இனிமையான செய்தி :

 நம் தெய்வத் திரு ஜி.ஜி.அய்யா அவர்களுக்கு விரைவில்  குருவரெட்டியூரில் சிலை வைக்கப்போவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

VIVASAIEKALE,NANBARKALE MATHI YOSINGA.விவசாயிகளே நண்பர்களே மாத்தி யோசிங்க,,(TAMIL)

விவசாயிகளே நண்பர்களே மாத்தி யோசிங்க



இதுவரை ஏமாந்ததே போதும் ஈமு, நாட்டுக்கோழி, ஆடு, கொப்பரைத் தேங்காய் இப்ப லேட்டஸ்ட் ஆக அகர் மரம் .இதுல பணம் போட்டு அவன் ஏமாத்திட்டான் என்று ஏமாறவேண்டாம்.ரூ.100000 க்கு மாதம் ரூ 8000 வந்தா கூட 10 மாசத்துல கோழி செட்டுக்கு ரூ 20000 ஆக நாம போட பணம் ஒரு வருசத்துதல வந்துடும்,பிறகு போனஸ் + பிறகு நமக்கு லாபம் என நினைத்து பணம் போட்டோம் ஏமாத்திட்டான் .

இதையே நாம் கொஞ்சம் மாற்றி யோசித்து நம் வீட்டில் நாமே செட் அமைத்து சுமார் 10 கோழிகள், 5 ஆடுகள் 
வாங்கி அதை பராமரித்தல் நமக்கும் லாபம் கண்டிப்பாக  வரும்.செட்டின் கீழ் தளம் காரை போட்டு,ஒரு பக்கம் தாழ்வாக இருந்தால் ஆட்டு மலம்,சிறுநீர்  போன்றவை கழுவும்போது அது தொட்டியில் சேகரிக்கப்பட்டு வயலுக்கு நீர் பாய்ச்சும்  போது கலந்து உரமாக  பாய்ச்சலாம்.
ஆடுகளுக்கு தீவனம் நம் தோட்டத்தில் பயிரிட்டு அதை தொட்டி போன்ற அமைப்பில் (plastic canes கூட  இருக்கலாம்),சிறு துண்டுகளாக நறுக்கி உணவளிக்கலாம்.இது வருடம் குறைந்தபட்சம்  சுமார் ரூ 70000 பெறலாம்.இதை நான் நேரில் பார்த்தேன்.
அது சரி மேடுக்காடாக இருந்தால் என்ன செய்வது? சீசன்க்கு தகுந்தாற்போல் விவசாய பொருள்களை வாங்கி விற்கலாம்,உதாரணமாக மஞ்சள்,பருத்தி ,.மேலும் பசுமை விகடன் போன்ற இதழ்களை வாங்கி படிக்கணும் . இதுவரை நாம் இருந்தது விவசாயியாக ,இனிமேல்  வியாபாரியாகவும்  இருப்போம்.

கொஞ்சம் முயற்சி செய்தால்,நாமும் முன்னேறலாங்க.
 


ARULMIKU PRAKATHEESWARAR AALAYAM THANJAIஅருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம்,தஞ்சை

தஞ்சை பெரிய  கோவில் புகைப்படங்கள் 




























அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை .